வியாழன், 13 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தல் - அரசு பொது விடுமுறை - அரசாணை

உள்ளாட்சி தேர்தல் 2011 - அரசு பொது விடுமுறை அறிவிப்பு.

October 17 and 19 local body elections of TamilNadu is going to taken place.

அக்டோபர் மற்றும் ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்காக விடுமுறை அறிவிக்கும் அரசாணை.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

வந்தான் வென்றான் விமர்சனம்


எனது வலைப்பூவில் இரண்டாவது பதிவாக வந்தான் வென்றான் திரைப்படத்தின் விமர்சனத்தை எழுதுகிறேன்.




நான் பல நாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த ஒரு திரைப்படம் வந்தான் வென்றான். ஏற்கனவே நண்பர் ஒருவர் படம் பார்த்து விட்டு வந்து என்னிடம் பேசிய பிறகும் நான் பார்க்க சென்றது எனது தவறு.
மும்பை என்றாலே ரவுடிகள் தான் என்பது கோலிவுட் கணக்கு. நாயகனுக்கு பிறகு தமிழ் சினிமா எவ்வளவோ முன்னேறி விட்டது தொழில்நுட்ப ரீதியிலும் கதைக்களங்களிலும். ஆனாலும் திரு.கண்ணன் போன்ற இயக்குனர்கள் இது போன்ற படங்களை இயக்குவது மனதுக்கு வருத்தமாக உள்ளது. சிறு வயதில் தம்பியை கொலை செய்து விட்டு (தம்பி காப்பாற்றப்பட்டது நந்தாவுக்கு தெரியாது) தப்பியோடி மும்பைக்கு சென்று DON ஆக மாறுகிறார். அவரை திருந்தி போலீசில் சரணடைய வைக்க முயலும் கதாநாயகனாக வரும் ஜீவா.
நந்தா என்ன செய்கிறார் என்பதே கதை. இதற்கான பதிலை ஒற்றை வரியில் எழுதி இருக்கலாம். இதற்காக நாம் இரண்டரை மணி நேரம் காத்திருந்தோம் என்பதே உண்மை.
அண்ணன்-தம்பி சண்டையினை ஜீவா ஏற்கனவே சிங்கம்புலியில் இரண்டு
வேடங்களில் செய்து இருந்தார். மறுபடியும் முயற்சித்தது ஏன் என தெரியவில்லை.






மொத்தத்தில் வந்தான் - சென்றான்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நரேந்திர மோடியும் சத்பாவன இயக்கமும்




குஜராத்தை நிலநடுக்கம், கலவரம் போன்ற பேரழிவிற்கு பிறகு வளர்ச்சிபாதையில் முன்னெடுத்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இது இப்போது ஒரு இறந்து போன செய்தி.

குஜராத் பல துறைகளிலும் தற்போது சிறந்து விளங்குகிறது.

> 24 x 7 மின்சார வசதி அணைத்து கிராமங்களுக்கும்.
> இந்தியாவின் GDP யில் 10% பங்களிப்பு குஜராத் மட்டுமே.
> தொழில் துறையில் முன்னோடி.



நரேந்திர மோடி தன்னை ஒரு சிறந்த செயலாற்றும் முதலமைச்சராக (Effective CM) நிரூபித்து விட்டார்.

இது அவரது இரண்டாவது பரிணாமம் - தன்னை பிரதம மந்திரிக்கான போட்டியில் மறுபடியும் உயிர்ப்பித்துள்ளார். இந்த முறை அவருக்கு உதவிஉள்ளது அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கை. இந்த சத்பாவன இயக்கம் அவருக்கு மட்டுமே மத்திய அரசியலில் அவருடைய நிலையை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே பயன்படும்.

ஏற்கனவே ஆளும் மத்திய அரசாங்கம் தனக்கு தானே பல ஆப்பு வைத்துக்கொண்டு உள்ளது.
(உபயம்: ராஜா,கனிமொழி, கல்மாடி)
எனவே அடுத்த தேர்தலில் ஆட்சி கவிழுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

இது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். பழம் விழுவதற்கு முன்பே சாப்பிடுவது யார் என்று முடிவு எடுக்க வேண்டி உள்ளது.



இது பழத்திற்கான போட்டி.
இதைப்பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம்.