நான் பார்த்ததும் படித்ததும் மற்றும் ரசித்ததும். நான் பார்த்த என்னுடைய பார்வையில்....
வியாழன், 12 ஜூலை, 2012
செவ்வாய், 10 ஜூலை, 2012
ரயில் பயணங்கள் பாகம் 1
பொதுவாக நாகர்கோவில் அல்லது தென் தமிழகத்தின் கடைசி மூலையில் பிறந்து விட்டால் பயணம் என்பது அவர்களின் பிறப்புரிமை ஆகி விடும்.
இது போன்ற ஆப்பிள் / ஐ பாட் யுகத்தில் கூட திரவியம் தேடி அலைவது நமது அனைவருக்கும் குறிக்கோளாக உள்ளது. திரவியத்தின் அளவு மட்டுமே மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படலாம்.
எனது முதல் பகுதி கோயம்புத்தூர் பாசஞ்சர் ரயிலில் ஆரம்பமாகின்றது. காலை 6 மணிக்கு பீளமேட்டிலுள்ள எனது தனி அறையிலிருந்து ஆரம்பிக்கும் பயணம் இரவு 9 மணிக்கு வீட்டில் முடிவடையும்.
ஒரு முழு நாளை விழுங்கி பல வகையான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இதற்குள் எத்தனை மனிதர்கள், எத்தனை குழந்தைகள், அவர்களை விரட்டும் கோபக்கார தாத்தாக்கள், பாசமுடன் உச்சி முகரும் பாட்டிகள், பக்கத்துக்கு இருக்கையில் இருக்கும் பாப்பாவுக்கு தெரியாமல் தமது குழந்தைக்கு தின்பண்டங்கள் தரும் தந்தைகள்....
மணப்பறை முறுக்கு, கொடைரோடு பழங்கள், கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்பேடா திருநெல்வேலி அல்வா என கடைசியாக மனதும் வயிறும் நிறைந்ததும் நம்மை நாகர்கோவில் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு உல்லாச பயணம்.
டுவீட்டுகள்
புது மணத்தம்பதிகளையும் புது காதலர்களையும் மின்சார ரயிலில் பயணம் செய்ய தயவு செய்து அனுமதிக்காதீர்...
கடுப்பேத்துறாங்க மை லார்ட்
ஞாயிறு, 8 ஜூலை, 2012
ஆஹா ஏர் இந்தியா
ஆஹா ஏர் இந்தியா ....
பல நெருக்கடிகளில் இன்று சிக்கி மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தவரிடமிருந்து பல வருடங்களுக்கு முன்னால் வந்த இந்தியாவைப்பற்றிய ஒரு நகைச்சுவை தொகுப்பு. "This Makes No Sense".
பதிவிறக்கம் செய்ய உரலி THIS MAKES NO SENSE
இப்போது இது ஒரு நகை முரண்..
பல நெருக்கடிகளில் இன்று சிக்கி மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தவரிடமிருந்து பல வருடங்களுக்கு முன்னால் வந்த இந்தியாவைப்பற்றிய ஒரு நகைச்சுவை தொகுப்பு. "This Makes No Sense".
பதிவிறக்கம் செய்ய உரலி THIS MAKES NO SENSE
இப்போது இது ஒரு நகை முரண்..
புதன், 27 ஜூன், 2012
வாழ்த்துக்கள்
நேற்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக நாட்டு மக்கள் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.
வழக்கமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சர் பதவியை பிடிக்க பெரும் போட்டியே நடக்கும். ஆனால் தற்போது நாட்டு பொருளாதாரம் இருக்கும் நிலையில் நிதி மந்திரி பதவி தனக்கு வந்து விடக்கூடாது என்றே பலரும் வேண்டிக்கொண்டுள்ளனர்.
all roads leads to rome என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோலவே இங்கே அனைத்துக்கும் திரு. மன்மோகன் சிங் அவர்கள் தனது மௌனத்தினால் தற்காத்துக்கொள்ள முயற்சிப்பார்.
நேரு குடும்பத்திலேயே ஒரே நேரத்தில் இரண்டு ரப்பர் ஸ்டாம்புகளை உருவாக்கியவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் மட்டுமே.
வழக்கமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சர் பதவியை பிடிக்க பெரும் போட்டியே நடக்கும். ஆனால் தற்போது நாட்டு பொருளாதாரம் இருக்கும் நிலையில் நிதி மந்திரி பதவி தனக்கு வந்து விடக்கூடாது என்றே பலரும் வேண்டிக்கொண்டுள்ளனர்.
all roads leads to rome என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோலவே இங்கே அனைத்துக்கும் திரு. மன்மோகன் சிங் அவர்கள் தனது மௌனத்தினால் தற்காத்துக்கொள்ள முயற்சிப்பார்.
| நன்றி: MTN |
நேரு குடும்பத்திலேயே ஒரே நேரத்தில் இரண்டு ரப்பர் ஸ்டாம்புகளை உருவாக்கியவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் மட்டுமே.
லேபிள்கள்:
சோனியா காந்தி,
பிரணாப் முகர்ஜி,
மன்மோகன் சிங்,
ஜனாதிபதி
திங்கள், 25 ஜூன், 2012
பிரணாபிற்கு ஆதரவு
பிரணாபிற்கு ஆதரவு
சிறிது மந்தமாக இருந்த டெல்லி அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
நிதி மந்திரியாக இருந்து சிறப்பாக பணியாற்றிய பிரணாபிற்கு பதவி உயர்வு அளிக்க திருமதி.சோனியா காந்தி அவர்கள் முடிவு செய்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தினை எந்த விதத்தில் பாதிக்கும் (favour or adverse) என்பது போகப்போக தெரியும்.
சிறிது மந்தமாக இருந்த டெல்லி அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
நிதி மந்திரியாக இருந்து சிறப்பாக பணியாற்றிய பிரணாபிற்கு பதவி உயர்வு அளிக்க திருமதி.சோனியா காந்தி அவர்கள் முடிவு செய்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தினை எந்த விதத்தில் பாதிக்கும் (favour or adverse) என்பது போகப்போக தெரியும்.
பன்ச் லைன்
பேசாமல் அனைத்து மத்திய மந்திரிகளையும் ஜனாதிபதியாக பதவி அமர்த்தி விடலாம். இந்தியாவாவது தப்பிக்கும்.
லேபிள்கள்:
சோனியா காந்தி,
பிரணாப் முகர்ஜி,
மன்மோகன் சிங்,
ஜனாதிபதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

